
அஜித்தின் அடுத்த படத்தற்கு மங்காத்தா என தலைப்பிட்டிருந்தார் அப்படத்தை இயக்கும் டைரக்டர் வெங்கட்பிரபு. இப்போது அந்த தலைப்புக்கு சிக்கல் வந்திருக்கிறது. தயாநிதி அழகிரி தயாரிக்கவுள்ள மங்காத்தா படத்தில் அஜித் ஜோடியாக நீது சந்திரா நடிக்கவிருக்கிறார். தற்போது கார் ரேஸில் பிஸியாக இருக்கும் அஜித், சென்னை திரும்பியதும் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இந்நிலையில் மங்காத்தா என்ற தலைப்புக்கு சிக்கல் வந்துள்ளது. ஜெமினி நிறுவனத்தை சேர்ந்த மனோ அக்கினேனி இந்த தலைப்பை ஏற்கனவே பதிவு செய்து வைத்திருக்கிறாராம். இந்த தலைப்புக்கு ஏற்ற கதையையும் தயாராக வைத்திருக்கும் அவர், எக்காரணம் கொண்டும் மங்காத்தாவை விட்டுக் கொடுக்க மாட்டேன், என்று விடாப்பிடியாக கூறி விட்டாராம். வெங்கட்பிரபு, அஜித் என முக்கிய புள்ளிகள் பேசியும் மசியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மங்காத்தா தலைப்பு மாற்றப்படக் கூடும் என தெரிகிறது. இதுதொடர்பாக தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி மற்றும் நாயகன் அஜித்திடம் ஆலோசனையில் இறங்கியிருக்கிறாராம் வெங்கட்பிரபு.
பத்திரிக்கையாளராக பணியாற்றி வரும் முருகன் மந்திரம், விருந்தாளி படம் மூலமாக பாடலாசிரியராக உயர்ந்துள்ளார்.
விருந்தாளி படத்தில் கடிதமே கடிதமே, எந்தன் உயிரே, கொக்க கொக்க கோழி, ஆச அரக்கி ஆகிய நான்கு பாடல்களை முருகன் மந்திரம் எழுதியுள்ளார். இது தவிர படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் இடம் பெற்றுள்ள பாடலையும் எழுதியிருக்கிறார்.
தொடர்ந்திடும் பயணங்களே
தொடருமா உறவுகளே
வாழ்க்கையின் பாதையில்
யாருடன் யார் வருவார்
இலங்கையில் நடைபெறும் “ரெடி” இந்தி படப்பிடிப்பில் பங்கேற்று அசின் நடித்து வருகிறார். இலங்கை செல்ல வேண்டாம் என திரைப்பட அமைப்புகள் வற்புறுத்தின. அதை ஏற்காமல் சென்றதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி வற்புறுத்தியுள்ளார் .

இப்படத்தில் அவரும் பிரசன்னாவும் இணைந்து நடிக்கிறார்கள். படத்தின் பெயர் 'முரண்'. 'முரண்' படத்தை மிக பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாக்கயிருக்கிறார் சேரன். இதில் இரண்டு புதுமுக நாயகிகள் அறிமுகமாகிறார்கள். இப்படத்தை புதிய இயக்குனர் ராஜன் மாதவ் இயக்குகிறார். இவர் பிரபல மலையாள இசையமைப்பாளர் ரவீந்திரனின் மகன். அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய் போன்ற படங்களில் மிஷ்கினிடம் இணை இயக்குனராக பணிபுரிந்தவர். இவரின் தம்பி சஞ்சன் மாதவ் இதற்கு இசையமைக்கிறார். வரும் ஆகஸ்டு மாதம் படப்பிடிப்பு துவங்கயிருக்கிறது. ஜனவரி மாதம் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்கள்.
வதந்தி பற்றிக் கவலையே இல்லை-காஜல்
என்னைப் பற்றி வரும் வதந்திகள், கிசுகிசுக்கள் குறித்து நான் கவலையே படுவதில்லை என்கிறார் காஜல் அகர்வால் படு கேஷுவலாக.
பாரதிராஜாவின் பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் காஜல் அகர்வால். இருப்பினும் பழனி படம்தான் இவருக்கு அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இப்போது நான் மகான் அல்ல மூலம் கார்த்தியுடன் ஜோடி சேர்ந்து தமிழ் சினிமாவில் தனது நிலையை ஸ்திரப்படுத்த ஆர்வமாக உள்ளார்.
படத்தில் கார்த்தியுடன் படு நெருக்கமாக நடித்துள்ளாராம் காஜல். இதை வைத்து வதந்திகள் கிளம்பும் அளவுக்கு நெருக்கமாக நடித்துள்ளாராம். அப்படி கிளம்பினால் கவலை இல்லையா என்று காஜலிடம் கேட்டால், வதந்திகள் பற்றி பொதுவாக நான் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. முதலில் கேட்கும் போது சங்கடமாக இருக்கும். வருத்தப்படுவேன். ஆனால் பின்னர் அதை மறந்தே போய் விடுவேன்.
என்னைப் பற்றி என்னைப் பெற்றவர்களுக்குத் தெரியும். எனவே நான் இப்போதெல்லாம் இதுகுறித்து கவலைப்படுவதே இல்லை. அது என்னைப் பாதிக்கவும் செய்வதில்லை.
என்னுடன் நடிப்பவர்களுக்கும், எனக்கும் இதுதொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்படாத வரைஇதுகுறித்து நான் கவலையே பட மாட்டேன் என்கிறார் கூலாக.
சரி காஜலுக்கு ரொம்பப் பிடித்த நடிகை யார் தெரியுமா?. ஜோதிகாவாம். அதுகுறித்து காஜல் கூறுகையில், நடிப்பிலும், குடும்ப வாழ்க்கையிலும் ஜோதிகா காட்டும் ஈடுபாடு என்னை வியக்க வைக்கிறது. உச்சத்தில் இருந்தபோது தடாலடியாக திரையுலகை விட்டு விலகியவர் ஜோதிகா. அந்த தைரியம் யாருக்கும் வராது. இப்போது குடும்ப வாழ்க்கையிலும் அவர் பிரமாதமாக நடந்து கொள்கிறார் என்பதை கேள்விப்படும்போது ஆச்சரியமாக இருக்கிறது. இதனால்தான் அவரை எனக்கு ரொம்பப் பிடிக்கும் என்கிறார் வியப்பில் விழிகள் விரிந்த நிலையில்.
காஜலுக்கு சார்லிஸ் ஏஞ்செல்ஸ் போல அதிரடியான பெண்ணாக ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளதாம்.
யாராவது நிறைவேத்தி வையுங்களேன்...!
Copyright © 2001-2009 by nakkeeran.com