தமன்னாவின் பேராசை!

'வெள்ளைக் கரப்பான்பூச்சி' என்று திரையுலகினரால் செல்லமாக (!?) அழைக்கப்படும் தமன்னாவுக்கு நன்கு நடிக்க வருகிறதோ இல்லையோ... வாய்ப்புகள் எக்கச்சக்கமாய் குவிகின்றன. ஜெயம் ரவி, விஜய் [^] என முன்னணி நடிகர்களின் படங்களில் அடுத்தடுத்து வாய்ப்பு என்பதால் சம்பளத்தை தாறுமாறாக உயர்த்திவிட்டாரம் அம்மணி. இதுவரை ரூ.55 லட்சம் வரை வாங்கிக் கொண்டிருந்தவர், சுறா படத்தில் நடிக்க ரூ. 1 கோடி சம்பளம் பேசியுள்ளார். ஜெயம் ரவியுடன் நடிக்கும் படத்துக்கும் இதேதான் சம்பளமாம். பையா படத்தில் குறிப்பிட்ட தொகைக்கு முதலில் ஒப்புக் கொண்ட தமன்னா, இப்போது 'என் ரேஞ்சுக்கு அது ரொம்ப குறைச்சலாச்சே' என்று ரொம்ப பீல் பண்ணுகிறாராம். அதனால் லிங்குசாமியிடம், என்னுடைய இப்போதைய ரேட்டைக் கொடுக்க முயற்சி பண்ணுங்க என்று கூறி அதிர்ச்சியடைய வைத்துள்ளாராம்.


 


வீடியோ.. விவேக் மீது த்ரிஷா அம்மா பாய்ச்சல்

இந்த வீடியோ- புகைப்படங்கள் வெளியாகி சில ஆண்டுகள் ஆகிவிட்டன. இவை அனைத்தும் போலியானவை என்பதை நிலைநாட்ட, ரொம்ம்ம்ப கஷ்டப்பட்டு த்ரிஷாவும் அவரது அம்மாவும் பட்ட பாடு கொஞ்சமல்ல. ஆனால் விவேக்கோ, இந்தப் புகைப்படங்கள் அனைத்தும் உண்மையானவை என்ற அர்த்தத்திலேயே பேசினார். "...த்ரிஷா குளிக்கும்போது போட்டோ, வீடியோ எடுத்து அதை பத்திரிகையில போடறீங்களே, குளிக்கும்போது ட்ரெஸ் இல்லாமத்தாண்டா குளிப்பாங்க... ங்கொக்கா குளிக்கிறப்ப நிர்வாணமா போட்டோ எடுத்துப் போடறதுதானே" என்ற அரிய தத்துவத்தைக் கக்கியிருந்தார்.
இது த்ரிஷாவை செம கடுப்பேற்றியுள்ளது. அதிலும் அவரது அம்மா [^] உமா கிருஷ்ணன், கோபத்தின் உச்சிக்கே போய் விவேக்கை லெப்ட் ரைட் வாங்கிவிட்டாராம்

திருமணமானாலும் கணவர் வீட்டுக்குச் செல்லாமல் தாய் வீட்டிலேயே இருந்து வருகிறாராம் மீனா. இது வித்யாசாகர் வீட்டில் சலசலப்பைக் கிளப்பியுள்ளதாம். 'தம்பிக்கோட்டை' என்ற படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தமாகியுள்ளார்

காதலனை கைப்பிடிக்கிறார் ஜெனீலியா

film

ஜெனீலியாவுக்கும், அவரது காதலரும் மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகனுமான ரித்தேஷ் தேஷ்முக்கிற்கும் ஜூலை மாதம் திருமணம் நடப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. தமிழில் பாய்ஸ், சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம் உட்பட பல படங்களில் நடித்தவர் ஜெனீலியா. இவர் 2003ஆம் ஆண்டு துஜே மேரி கசம் என்ற இந்தி படத்தில் நடித்த போது, இவருக்கும் படத்தின் நாயகன் ரித்தேஷ் தேஷ்முக்கிற்கும் காதல் மலர்ந்தது. ரித்தேஷ், மகாராஷ்ட்ர மாநில முன்னாள் முதல்வரும், தற்போதைய மத்திய அமைச்சருமான விலாஸ்ராவ் தேஷ்முக் மகன். கடந்த சில வருடங்களாக காதலித்து வந்த இவர்கள், அதை மறுத்துவந்தனர். இந்நிலையில் இவர்களது பெற்றோர் திருமணத்துக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளனர். இவர்களது திருமணம் ஜூலை மாதம் நடக்கிறது. இச்செய்தி குறித்து ஜெனீலியாவிடம் கேட்டபோது, அவர் மறுத்தார். இப்போதைக்கு திருமணம் இல்லை. அது தவறான தகவல் என்றார். ரித்தேஷ் ஓரு கட்டிடகலை நிபுணர், தனது வேலையில் அதிக நேரம் செலவழித்தாலும் ஜெனீலியாவுக்காக சற்று நேரம் ஒதுக்கிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

 

வீட்டு வசதி வாரிய நிலம வாங்கியதில் மோசடி- விஜய்க்கு நோட்டீஸ்

சென்னை: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் நடிகர் விஜய்க்கு ஒதுக்கீடு செய்த நிலம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் விஜய், வீட்டு வசதி வாரியம் ஆகியோர் நவம்பர் 9ம் தேதிககுள் விளக்கம் அளிக்குமாறு கூறி நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் [^] உத்தரவிட்டுள்ளது.சென்னை ஷெனாய் நகரை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர், சென்னை [^] உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தாக்கல் செய்துள்ளார். அதில், நடிகர் விஜய்க்கு கொரட்டூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சுமார் 5 கிரவுண்டு நிலம் ஒதுக்கீடு செய்துள்ளது. விஜய்க்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் நிலம் ஒதுக்கீடு செய்தது சட்ட விரோதம். இதற்கான வீட்டு வசதி வாரியத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.இந்த விஷயத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பொய்யான தகவல்களை தெரிவித்திருக்கிறது. எனவே நடிகர் விஜய்க்கு 5 கிரவுண்டு நிலம் ஒதுக்கீடு செய்ததை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் ஆஜரான வக்கீல் யாருக்கு, எவ்வளவு நிலம் ஒதுக்க வேண்டும் என்பது அரசாங்கத்திற்கு உள்ள அதிகாரம் என்றார்.வாதங்களைக் கேட்ட நீதிபதி, 2004ம் ஆண்டு திராவிடியன் பஞ்சாயத்துக்கு ஒதுக்கிய அதே நிலத்தை 2007ம் ஆண்டு மீண்டும் எப்படி நடிகர் [^] விஜய்க்கு தமிழ்நாடு [^] வீட்டு வசதி வாரியம் ஒதுக்கீடு செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பினார். அதன் பின்னர் விஜய், வீட்டு வசதி வாரியம் ஆகிய இரு தரப்பும் நவம்பர் 9ம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு கூறி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.


Copyright © 2001-2009 by EnvisionTimes.com