எந்திரன் பற்றி கேட்டால் ஏன் இந்த எஸ்கேப்

 

எந்திரன் சயின்ஸ் படம். ரொம்ப சிறப்பா வந்திருக்கு. இதுபோன்ற படத்துக்கு இப்போதுதான் இசையமைக்கிறேன். மியூசிக் ஸ்பெஷலா வந்திருக்கு. கேட்பவர்களுக்கு ரொம்ப புது அனுபவமா இருக்கும் என்று ஏ.ஆர்.ரகுமான் சொல்லியிருப்பது படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பை கொடுத்திருக்கிறது.

கடந்த 7ம் தேதி எந்திரன் படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் முடிந்து கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. அப்போது ரஜினி... சுற்றி இருந்தவர்களின் கேள்விக்கு, ‘’ஆகஸ்ட்டில் படம் ரிலீஸ் ஆகிவிடும்’’ என்று தெரிவித்தார். இந்நிலையில் சென்னையில் நடந்த ஒரு விழாவில் ஷங்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விழா முடிந்து வெளியே வந்த அவரை சந்திக்க செய்தியாளர்கள் காத்து நின்றனர்.

இது தெரிந்ததும், ஷங்கர் வேக வேகமாக நடந்து சென்று காரில் ஏறிக்கொண்டார். கார் கண்ணாடிகளை மூடுவதற்குள் செய்தியாளர்கள் அவரிடம், எந்திரன் எப்போ ரிலீஸ்? என்று கேட்க, ‘செம்படம்பரில் ரிலீஸ் ஆகிவிடும்’ என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே கார் மூவ் ஆனது. ரஜினி பற்றியும், எந்திரன் பற்றியும் செய்தியாளர்கள் கேள்விகளை அடுக்கிக்கொண்டிருந்தனர். ஆனால் அவை எதுவும் ஷங்கர் காதுக்கு எட்டியிருக்காது. அதற்குள் காரின் கண்ணாடிகள் மூடப்பட்டன. எந்திரன் பற்றி கேட்டால் ஏன் இப்படி எஸ்கேப் ஆகிறார் ஷங்கர்.

 



யாரைப்பார்த்தாலும், ``அண்ணா''  

கதாநாயகனை தவிர மற்ற ஆண்களை எல்லாம் ``அண்ணா'' என்று அழைக்கும் பழக்கத்தை தொடங்கி வைத்தவர், `ஷ்' நடிகைதான். அவர் வழியில் மும்பையில் இருந்து வரும் அனைத்து நடிகைகளும் (பாதுகாப்பு கருதி) எல்லா ஆண்களையும் ``அண்ணா'' என்றே அழைக்கிறார்கள். `லேட்டஸ்ட்' ஆக அந்த பட்டியலில் சேர்ந்திருப்பவர், மீனாட்சி. இவர், யாரைப்பார்த்தாலும் ``அண்ணா'' என்று அழைத்து பரவசப்படுத்துகிறார்!

இசையுடன் மலர்ந்த காதல்!  

லாடம்' நாயகிக்கும், தேவிஸ்ரீ... என்ற இசையமைப்பாளருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும், ``நீயின்றி நான் இல்லை'' என்கிற அளவுக்கு நெருக்கமாக பழகியதன் விளைவு, உடனடியாக திருமணம் செய்துகொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளி இருக்கிறதாம்! டும்..டும்.. அறிவிப்பு விரைவில் வரப்போகிறது!

 

 

'கட் அன்ட் ரைட்' திரிஷா!

filmதிரிஷா நடித்து அறிமுகமாகும் முதல் இந்திப் படத்தில் அவருக்கு அட்டகாசமான கேரக்டராம். கறாரான நகராட்சி ஆணையராக வருகிறாராம். அவருக்கும், நாயகன் அக்ஷய் குமாருக்கும் இடையே நடக்கும் மோதல்தான் படத்தின் முக்கியக் கதையாம். பிரியதர்ஷன் இயக்க, அக்ஷய் குமார் ஜோடியாக நடிக்கிறார் திரிஷா இப்படத்தில். இது அவருக்கு முதல் இந்திப் படம் .

இதனால் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளார். பிரியதர்ஷன்தான் சினிமாவுக்கு திரிஷாவை அறிமுகப்படுத்தியவர். எனவே இந்தியிலும் தனக்கு நல்ல அறிமுகத்தை பிரியன் கொடுப்பார் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் திரிஷா. இப்படத்தை தயாரித்திருப்பவர் அக்ஷய்குமார்.

மகாராஷ்டிராவின் பல்தான் நகரில் சாலை கான்டிராக்டராக இருக்கிறார் அக்ஷய் குமார். சுத்தமான மராத்திக்காரர். டிப்பிக்கல் மராத்தியாக இருப்பவர். கையில் ஒரு கைப்பை, குடை சகிதம் எங்கும் செல்பவர். மறுபக்கம் நாயகி திரிஷா. அதே நகரின் நகராட்சி ஆணையராக வருகிறார் திரிஷா. படு கறரானாவர். ரூல் புக்கில் என்ன உள்ளதோ அதை மட்டுமே செய்வார். லஞ்சம், ஊழல் என்றால் கண்களிலும், காதுகளிலும் நெருப்பைக் கக்குபவர்.

அறிவுப்பூர்வமாக எதையும் அணுகும் திரிஷாவுக்கும், எப்போதும் ஒருவித டென்ஷனுடனேயே இருக்கும் அக்ஷய்குமாருக்கும் இடையே நடக்கும் மோதல்கள், பின்னர் ஏற்படும் காதல் என படம் முழுக்க படு கலாய்ப்பாக இருக்குமாம். இந்தப் படத்தில் திரிஷாவுக்கு நடிக்கவும், ஆடவும், குத்தாட்டம் போடவும் போதுமான வாய்ப்புகளைக் கொடுத்திருக்கிறாராம் பிரியதர்ஷன். எனவே இந்தப் படம் தனக்கு இந்தியில் நல்ல பிளாட்பார்ம் அமைத்துத் தரும் என்ற பெரும் நம்பிக்கையி்ல் உள்ளார் திரிஷா

புரியாத மர்மம்! புதுமுகங்கள் நடித்து புற்றீசல் கூட்டம் போல், வாரத்துக்கு ஐந்து படம் அல்லது ஆறு படங்கள் திரைக்கு வருகின்றன. அந்த படங்கள் அனைத்துமே ஒரு வாரம் ஓடுவதே அபூர்வமாக இருக்கிறது. இருப்பினும் புதுமுகங்களை வைத்து படம் தயாரிப்பவர்களின் எண்ணிக்கை குறையவில்லை. இது, ஒரு புரியாத மர்மமாகவே இருக்கிறது!

 

படப்பிடிப்பில் நயனதாரா திடீர் மயக்கம்-'ரெஸ்ட்' எடுக்க அறிவுறுத்தல்!

பாஸ் என்கிற பாஸ்கரன் படப்பிடிப்பின்போது நடிகை நயனதாரா மயக்கம் போட்டு விழுந்தார். இதையடுத்து அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் போதிய அளவுக்கு ஓய்வெடுக்குமாறு அறிவுறுத்தினர். நயனதாரா முன்பு போல பொலிவாக இல்லை. மிகவும் மெலிந்து விட்டார். இத்தனைக்கும் கை நிறைய படங்களும் இல்லை. தமிழில் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் மட்டும்தான் நடித்து வருகிறார். இருப்பினும் அலைச்சல் அதிகம் என்பதால் அவருக்கு உடல் மெலிந்து போய் விட்டது. இந்த நிலையில் பாஸ் என்கிற பாஸ்கரன் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்தபோது அவருக்கு திடீர் என மயக்கம் வந்து விழுந்து விட்டார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள பாலுமகேந்திரா ஸ்டூடியோவில் நேற்று பாஸ் படத்தின் ஷூட்டிங் நடந்தது. ஆர்யா, நயனதாரா நடித்து வந்தனர். பிற்பகல் 2 மணியளவில் திடீரென செட்டில் மயங்கி விழுந்தார் நயனதாரா. இதையடுத்து ஷூட்டிங் நிறுத்தப்பட்டு டாக்டரை வரவழைத்தனர். அவர் வந்து நயனதாராவைப் பரிசோதித்துப் பார்த்தார். பின்னர் போதிய அளவுக்கு ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தினார். சரியாக சாப்பிடும்படியும் அட்வைஸ் செய்தார். இதைத் தொடர்ந்து தற்போது நயனதாரா ஓய்வில் இருந்து வருகிறார்.


Copyright © 2001-2009 by nakkeeran.com